சனி, 18 அக்டோபர், 2014

                                   வள்ளுவன்வாக்கு

                                                

பொய்சொல்லாதே
தீமை செய்யாதே
அன்பு காட்டு
நேர்மையாக நட
குழந்தையை வையாதே
கூடி வாழ்
முதியோரை மதி
மூத்தோர் சொல் கேள்
இயற்கையை நேசி
சுகாதாரமாய் வாழ்
அனைத்தும்
நீ  கூரிய  வார்த்தைதான்
வள்ளுவனே!
இன்று
வழுவிழந்து விட்டது
                                                                                                   .....ஆண்டியப்பன்.....                                                      

ஞாயிறு, 12 அக்டோபர், 2014

                                  வானம் உன் வசப்படும்

                                

வாழ வழியில்லை
வசந்தம்  வரவில்லை 
மகிழ்ச்சி கிடைக்கவில்லை
மலையேற சக்தியில்லை 
மயக்கம்  எனக்கில்லை 
மந்தையில் நானில்லை
மாடிவீடில்லை
மங்கையோ துணையில்லை
வாழ்க்கை பிடிப்பிடிப்பில்லை
சாகத் தேரியவில்லை
முட்டாளே!
இல்லை  என்பதை நிறுத்திவிடு
முடியும்  என்பதை கையிலெடு
கோழிக்குஞ்சாய்  இல்லாமல் நீ
ராஜாளிப் பருந்தாய் சிறகைவிரி
வானம் உன்னை வரவேற்கும்
                                                                                                         ...ஆண்டியப்பன்...

புதன், 8 அக்டோபர், 2014

                                        துன்பமில்லை

                                 

 புயலை வெறுத்து ஒதிக்கிவிட்டால்
தென்றலின் இனிமை தெரியாதே
தோல்வியை என்னி வருத்தமென்றால்
வெற்றி என்பது கிடையாது
சோர்ந்து வீட்டில்  படுத்துவிட்டால்
சுமைகள் என்றும் குறையாதே
விழுவதை என்னி வருந்தாதே
எழுவோம் என்பதை மறவாதே 
இரவை என்னி சூரியனும்
எழுவதை நிறுத்த முடியாதே
எதையும் தாங்கும் இதயமென்றல்
துன்பம் நிலைக்க முடியாதே
                                                                                                     .....ஆண்டியப்பன் .....

திங்கள், 6 அக்டோபர், 2014

                     பெண்கொடுமை தீர்க்கலாம் வா!

                                                                           

தென்றலை விரட்டும் புயலாய்
பணித்துளி விரட்டும் சூரியனாய்
மறையும் மாலை வேளையில்
இரத்தம் சிந்தும் கீழ்வானமாய் 
துன்பத்தை மறந்து சிரிக்கும்
சித்திரப்பெண்ணே
சிரித்து மறைக்கும் துன்பத்தை
தீர்க்க நினைக்கும் பெண்ணே
விளம்பரப் பக்கத்தில் முன்னும்
வீட்டியன் அடுப்பங்கரையில் பின்னும்
இருந்ததொருகாலம் மறையட்டும்
புதுமை படைக்கலாம் வா!
புத்துலகைப் படைக்கலாம் வா!
பெண்கொடுமை தீர்க்கலாம் வா!
                                                                                           .......ஆண்டியப்பன்........

வியாழன், 2 அக்டோபர், 2014

                                 ஒளியை ஏற்று

                             


என் வாழ்வை
ஏழையாக்கிய இறைவா!
உன் நெஞ்சில் 
என் மீது ஏன் வஞ்சம்!
என் வாழ்வை
இருட்டாக்கிய இறைவா!
உனக்கென்ன பெருமை என்று 
இறைவனைத்  திட்டும்  
எதற்கும் உதவாதவனே!
சோம்பேரியாக்கும்
இருட்டை விளக்க
உழைப்பெனும்
ஒளியைஏற்று
துன்பம் என்பது
தூர ஓடும்
.                                                                                                                                                                                     .....ஆண்டியப்பன்....