வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

                                     ஓட்டப்பந்தையம் 

                                                                                                                           

100மீட்டர் தூரத்தை 

மெதுவாக ஓடினேன் 

ஆசிரியர் திட்டினார் 

100மீட்டர் தூரத்தை 

சிறிது வேகமாக ஓடினேன் 

ஆசிரியர் மிகக் கோபம் கொண்டு 

வீட்டு நாயை ஏவி விட்டார் 

 நான்  ஓட்டத்தில்   

சாதனை படைத்தேன் 

ஆசிரியரை புகழ்ந்துகொண்டே 

                                                                                                                                                              ....ஆண்டியப்பன் .....

 

 

 

 

 

வியாழன், 21 ஆகஸ்ட், 2014

                                                 தீர்ப்பு                                                                                      

 நிலத்தை 
கால் புழுதியாக்கி 
விதை விதைத்து 
அறுவடைக்கு 
காத்து நிற்கும் 
உழவனாய் 
காகிதத்தில் 
கவிதை விதைத்து 
நீதிக்கூண்டில் 
நிற்கிறேன் 
வாசகனின் தீர்ப்பு 
இனிக்குமா?
கசக்குமா? 
                                                                                                                                                    .....ஆண்டியப்பன் ....

ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

                                      வெற்றி என்பது 

                                                             

 சோகம் என்பதை பதிந்து விட்டால் 

இன்பம் என்பது இருக்காது 

இயலா எண்ணம் இருந்துவிட்டல்

இயலும் செயல்கள்   கிடையாதே 

போகும்பாதை குருக்கென்றல்

பாதை ஊர்போய் சேராதே 

பள்ளம் மேடு இல்லை என்றால் 

வாழ்க்கை சிறக்க முடியாதே 

போட்டிகள் இல்லா உலகத்திலே 

வாழ்க்கை உயர முடியாதே 

விழுவதை எண்ணி வருந்திவிட்டால் 

எழவும் உன்னால் முடியாதே 

இரவை எண்ணி வருத்தமென்றால்

சூரியஒளியும் பிறக்காதே 

வாழ்வில் முயற்சி இல்லைஎன்றால் 

வெற்றி என்பது கிடையாதே 

                                                                                                           ....ஆண்டியப்பன் ....

 

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

                        வாழ்ந்து காட்டுவோம் வா !

                              

 லைலா   மசுனு காதலைப் 

படித்துப்பார் 

மும்தாசுக்காக  ஷாஜகான் கட்டிய 

தாஜ்மகாளைப்பார்

அம்பிகாபதி அமராவதியின் காதலை

உற்றுப்பார்

நல தமயந்திக் காதலை 

வாசித்துப்பார் 

இறப்பும் வேதனையும் 

துயரமும் தோல்வியும் 

சூழ்ந்திருப்பதைப்பார் 

காதல் என்பது 

இறப்பதற்கு அல்ல

நாமும்  சரித்திரம் படைப்போம்  

தலைவியே !

வாழ்ந்து காட்டுவோம் வா!

                                                                                                                                               ....ஆண்டியப்பன் .......

 

 

 

சனி, 9 ஆகஸ்ட், 2014

                               இவர்கள் நல்லவயர்கள்  

காலையில்  பணம் விதைத்து  

மாலையில் வட்டியுடன் 

அறுவடை செய்யும்
இவர்கள் நல்லவர்கள் 
ஐந்தாண்டு பணிசெய்ய 
அமரும் முன்னே
தொகுதிக்கு இவ்வளவாய் 
தொகுத்து விதைத்துவிட்டு 
ஐந்தாண்டில் அறுவடை செய்யும் 
இவர்கள் நல்லவர்கள் 
பையில் பணமில்லா 
பணிக்குச்சென்று 
பேனாவால் விதைதூவி 
மாலையில் பைநிரம்ப 
அறுவடை செய்யும் 
இவர்கள் நல்லவர்கள்
எய்தவன் எங்கோ இருக்க 
அம்பது கிளையை ஒடிக்க 
செய்தது நான்னென்று 
எடுத்துக்கேள்ளும் 
இவர்கள் நல்லவர்கள் 
இத்தனையும் தான்கண்டு 
எதுத்துக் கேட்காமல் 
நடப்பது நடக்கைட்டும் 
என்றென்னி 
விழித்து தூங்கும் 
இவர்களும் நல்லவர்கள்
                                                                                                ....ஆண்டியப்பன் ....

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

                   வாழ்க்கைஎன்பது 
                    

விந்தணுவில் போட்டியிட்டேன்
தாயின் கருவறையில் குழந்தையானேன்
விளையாட்டில் போட்டி யிட்டேன்
 வேற்றிபெற்றேன்
படிக்கும்போது போட்டியிட்டேன்
மதிப்பெண் அதிகம்பெற்றேன்
மணப்பெண் பார்க்க போட்டியிட்டேன்
நல்ல மனைவியை பெற்றேன்
அன்றுதான் தெரிந்தது
நித்தம்  அவளுடன் போட்டிபேட வேண்டும் என்று
ஆமாம்
போட்டி என்பது போட்டியல்ல
பொக்கிஷம் 

                                                                                                                      கே.ஆண்டியப்பன் .....