சனி, 9 ஆகஸ்ட், 2014

                               இவர்கள் நல்லவயர்கள்  

காலையில்  பணம் விதைத்து  

மாலையில் வட்டியுடன் 

அறுவடை செய்யும்
இவர்கள் நல்லவர்கள் 
ஐந்தாண்டு பணிசெய்ய 
அமரும் முன்னே
தொகுதிக்கு இவ்வளவாய் 
தொகுத்து விதைத்துவிட்டு 
ஐந்தாண்டில் அறுவடை செய்யும் 
இவர்கள் நல்லவர்கள் 
பையில் பணமில்லா 
பணிக்குச்சென்று 
பேனாவால் விதைதூவி 
மாலையில் பைநிரம்ப 
அறுவடை செய்யும் 
இவர்கள் நல்லவர்கள்
எய்தவன் எங்கோ இருக்க 
அம்பது கிளையை ஒடிக்க 
செய்தது நான்னென்று 
எடுத்துக்கேள்ளும் 
இவர்கள் நல்லவர்கள் 
இத்தனையும் தான்கண்டு 
எதுத்துக் கேட்காமல் 
நடப்பது நடக்கைட்டும் 
என்றென்னி 
விழித்து தூங்கும் 
இவர்களும் நல்லவர்கள்
                                                                                                ....ஆண்டியப்பன் ....

1 கருத்து:

Kasthuri Rengan சொன்னது…

சத்தமில்லாமல் இப்படி செயல்படுவது தப்பு..
வாழ்த்துக்கள்