செவ்வாய், 30 செப்டம்பர், 2014

                                          நினைவிலிடு

                                 

 முடியாதென்பதை
மூட்டை கட்டு
தோல்வி  என்பதை
தூரவிடு
இயலா எண்ணம் 
எரித்துவிட்டு
துன்பம்  என்பதை 
தூக்கிலிடு
தடைகள்  என்பதை
தவிர்த்துவிட்டு
முற்கள் முத்தமிட்டால்
தட்டிக்கோடு
மலர்கள் பக்கத்திலேதான்  இருக்கிறது
நினைவிலிடு
                                                                                                                                                                             ....ஆண்டியப்பன்.....


சனி, 27 செப்டம்பர், 2014

                                             மனைவி

                                                                Image result for new photos

சூரிய ஒளியை
சுருக்காய் மறைக்கும்
சிட்டுக்குருவி
மேகங்கள்
சந்திர வெளிச்சம்
சடுதியில்தடுக்கும்
அமாவாசை
இரவுகள்
கூடியிருந்து
மகிழ்ந்து திரிந்து
நட்பின் பின்னால்
நயவஞ்சகர்கள்
சொந்தம் சேர்த்து
பந்தம்பேசி
பாதியில்விளகும்
உறவுகள்
வஞ்சகமில்லாநெஞ்சம்
வழுக்கிவிழுஞ்தாலும்
தோல் கொடுக்க
துணைவியே துணை நின்றால்
எத்தனைமுறை விழுந்தாலும்
துவண்டுவிடாமல்
துணிந்துநிற்பேன்
என்னவளே!
                                                                                                                       ......ஆண்டியப்பன்.....

வெள்ளி, 26 செப்டம்பர், 2014

                                                              மாணவன்

                                 Image result for new photos

என்னுடைய கவிதைவரிகள்
சிறப்பானதாக இல்லை 
கவிதைநடை 
நன்றாகஇல்லை 
பொருள் 
தெளிவாகயில்லை
என்றுகூறும்
அறிவாளிகளே
நான் கண்ணதாசன் இல்லை
நான் வாலி இல்லை
நான் வைரமுத்து இல்லை
நான் முகவரிஇல்லாதவன்
முகவரிகொடுங்கள்
நானும் முத்தாய்
ஒளிவீசுவேன்
                                                                                                                                           .....ஆண்டியப்பன்........ 

செவ்வாய், 9 செப்டம்பர், 2014

                                              விவசாயி

                                         Red-eyed Tree Frog (Agalychnis callidryas), northern Costa Rica 

மேகத்தை  வரவாக்கி 

மழைத்துளியை நீராக்கி 

நிலத்திலே நீர்பாய்ச்சி

 ஏரோட்டி செராக்கி

சேற்றிலே விதைதூவி 

குழந்தையை பாதுகாக்கும் 

தாயாய் 

பயிரை பார்த்து வளர்த்து

அறுவடையில் 

சேர்த்து வைத்த 

நெர்பொதியை 

அடிமாட்டு விலைபேசி 

விற்று வந்த ஏழைக்கு 

அரசு கொடுத்தது 

கிலோ  இரண்டுரூபாய் அரிசி 

அவசர கழிவறைக்கு 

 அவசரமாய் தான்செல்ல 

கழிவறை  காவலரின் 

கதவருகே 

உண்ண  இரண்டுரூபாய் 

கழிக்க ஐந்துரூபாய் 

ஏழை என்றும் ஏழையாய் 

                                                                                                                                .....ஆண்டியப்பன் .........

http://andiappanka.blogspot.in/

ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

                              நல்ல மனிதனே !

                                                                           

 

காலற்றவன் 

விபத்தில்லாமல் 

நடப்பதைப்பார் 

கண்ணற்றவன் 

சரியாக

சிந்திப்பதைப்பார்

 படிக்காதவன் 

பண்புள்ளவனாக 

வாழ்வதைப்பார் 

ஊமையானவன் 

நல்லதை 

 எழுதுவதைப்பார் 

காதுகேட்காதவன் 

நல்லதை

பெசுவதைப்பார் 

 அத்தனை உறுப்பும் 

நன்றாய்  அமைந்த 

நல்லமனிதனே!

 இத்தனையும்  

நன்றாகப்பார் 

                                                                                                                                                         ......... ஆண்டியப்பன் .........

  


சனி, 6 செப்டம்பர், 2014

 

                                        குழைந்தைகள் 

                                    

 நாங்கள்

வைரம்பாயாத 

சிறுசெடிகள் 

நாங்கள் 

காய்ந்து உதிராத 

இளங்குறுத்துகள்

நாங்கள் 

இனிமைதரும் 

காலைகதிரவர்கள் 

நாங்கள் 

இரவில் ஒளிரும் 

முழு நிலவுகள்  

நாங்கள் 

பெட்டியில் படுத்துறங்கும் 

தீக்குச்சிகள் 

எங்களை 

 விளக்கேற்ற மட்டும் 

பயன்படுத்துங்கள் 

எரிப்பதற்கல்ல 

                                                                                                                                                                   .....ஆண்டியப்பன்.....




வெள்ளி, 5 செப்டம்பர், 2014

                                            ஆசிரியன்

                                                 

                       தட்டி தட்டி 

                      அணிகலன் செய்யும் 

                       சிறந்த

                        பொற்கொல்லனாக்குபவன் 

          அடித்து உடைத்து 

          சிலை வடிக்கும் 

          சிர்பியாக்குபவன்  

          நாட்டில் பலரை 

          நாயகனாக்க 

          நாளும் பாடுபடுபவன் 

          அறியாமை போக்கி

          அறிவை புகட்டி 

          அமைதியாய் 

          இருப்பவன் 

          தென்றலாய் தவழ்தாலும் 

          புயலாய் அடித்தாலும் 

          பூகம்பமாய் வெடித்தாலும் 

          பொறுமை இலக்காதவன் 

          காந்திய வழியில் 

          கர்மமே கண்ணாய் 

          தடைகளைத்தாண்டி 

          நாட்டின் உயர்வே 

          நலனென எண்ணி 

          நாளும் உழைத்து 

          நாளைய இந்தியாவை 

          இன்றே செதுக்கும் 

          உண்மைச்சிற்பி 

          ஆசிரியன் 

            (ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் )                .....ஆண்டியப்பன் ....