சனி, 9 மே, 2015

                                           பேனா!

                                        Image result for NATIONAL PHOTOS
ஓ!நெற்கதிர்களே!
உங்கள்  தலைகுனிவு
எங்கள் பசியைப் போக்கும் அமுதமாகிறது!
ஓ! மரங்களே!
கனிந்து குனிவதால் 
உயிகளின் சுவைமிகு  உணவாகிறது!
ஓ!கருமேகங்ககே!
நீங்கள் குனிவதால் 
எங்கும் பசுமை சிரிக்கிறது !
ஓ!தென்றலே !
நீ  குனியும் போது
உயிர்களின் சுவாசமாகிறாய்!
ஓ!சூரியனே !
நீ தலை குனியும் போதுதான்
பூமியே துயில்லேளுகிறது !
ஓ!எழுத்தாளர்களே!
உங்கள் பேனா  குனியும் 
ஒவ்வொரு முறையும் 
நம்  பாரதம் செழிப்பதற்காக இருக்கட்டும் !
                                                                                                                                                                                              .......ஆண்டியப்பன் ......

கருத்துகள் இல்லை: