ஞாயிறு, 25 மே, 2014

                                            உன் பார்வை 

உன் நிழலைப் பார்த்தேன்
நான் பார்த்ததெல்லாம்
பசுமையாய் தெரிந்தது
உன்பாதம்  பட்ட இடத்தைத்
தொட்டுப் பார்த்தேன்
பணிக்கூழாய்
பரவசமூட்டியது
உன் இடையைப் பார்த்தேன்
என்பார்வை
பறிபோனது
சற்று மேலே பார்த்தேன்
இமைக்க மறந்தேன்
உன்முகத்தைப் பார்த்தேன்
புரிந்துகொண்டேன்
நான்
நிலவாய் இருக்க நினைக்கிறேன்
நீயோ
சூரியனாய் 


புதன், 21 மே, 2014

                                     கொண்டாட்டம்   

பூந் தோட்டத்தில்
நின்று பார்
நினைவெள்ளம்  வாசம் வீசும்
பசுங் கூட்டத்தை
உற்றுப்பார்
கன்றுகளின் மகிழ்ச்சி தெரியும்
சிறு விதையை
உற்றுப்பார்
பெரிய மரத்தின் வேர்கள் தெரியும்
தாய் தந்தையறை
உற்றுப்பார்
அவர்களின் தியாகம் தெரியும்
 தாய் தந்தையரின்
மடியில் படுத்துப்பார்
மகிழ்ச்சியின் மான்பு புரியும்
திந்தமிழை
தின்றுப்பார்
செந்தமிழும் தேனாய் இனிக்கும்

                                                                            ...ஆண்டியப்பன்