பெண்கொடுமை தீர்க்கலாம் வா!
தென்றலை விரட்டும் புயலாய்
பணித்துளி விரட்டும் சூரியனாய்
மறையும் மாலை வேளையில்
இரத்தம் சிந்தும் கீழ்வானமாய்
துன்பத்தை மறந்து சிரிக்கும்
சித்திரப்பெண்ணே
சிரித்து மறைக்கும் துன்பத்தை
தீர்க்க நினைக்கும் பெண்ணே
விளம்பரப் பக்கத்தில் முன்னும்
வீட்டியன் அடுப்பங்கரையில் பின்னும்
இருந்ததொருகாலம் மறையட்டும்
புதுமை படைக்கலாம் வா!
புத்துலகைப் படைக்கலாம் வா!
பெண்கொடுமை தீர்க்கலாம் வா!
.......ஆண்டியப்பன்........
1 கருத்து:
அருமை நண்பரே
கருத்துரையிடுக