ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

                                             ஆசிரியார்   

                                Image result for super photos    

ஆசிரியர் மாணவர்களை 
மருத்துவர்களாக ஆக்குகிறார்
பொறியாளர்களாக ஆக்குகிறார்
மொழியாளர்களாக ஆக்குகிறார்
விவசாய அலுவலர்களாக  ஆக்குகிறார்
விஞ்ஞானிக்களாக ஆக்குகிறார்
படிப்பில் சிறந்த மாணவர்களாக ஆக்குகிறார்
ஆனால்
சுயசிந்தனை உடையவனாக 
சுதந்திரமாக செயல்படுபவனாக
பொதுவில் 
மனிதனாக மட்டும் ஆக்கும் நிலையை தவிர
                                                                                                                                                                             .....ஆண்டியப்பன் ......

சனி, 7 பிப்ரவரி, 2015

                             நீ! மனிதனாகலாம் 

                          

சிறு துளி நீரும்  பெருவேள்ளமாகிறது 
சிறு ஆறும்  பெருங்கடலாகிறது 
சிறு சிறு விதையும் பெருமரமாகிறது  
சிறு துளி மகரந்தமும் தேனாகிறது 
சிறு சிறு நெல்மணியும் நேர்குவியலாகிறது 
உழைக்க மறந்த  மனிதா!
சிறு உழைப்பைக் கொடுத்துப்பார்!
பெரிய சாதனை  படைக்கலாம்
கூடி வாழ்ந்து பார்!
கோடி நன்மைகள்  பெறலாம் 
கொடுமையை மறந்து பார் !
கும்பிடும் தெய்வமாகலாம்
நல்லதை நினைத்துப்பார்!
நீ! மனிதனாகலாம்
                                                                                                                                                                                      
                                                                                                                                                                    ......ஆண்டியப்பன்.......

புதன், 4 பிப்ரவரி, 2015

                             சூரியன் சுட்டெரிக்கும் 

 பசுமை படர்ந்து 
 பக்குவமாய் பல்லிளிக்கும் 
பசும்புற்கள்
புல்லின்  நுனியில் 
கொண்டையிட்டுஅமர்ந்திருக்கும் 
பனித்துளிகள் 
இன்ப சுகத்தை 
இனிதே  தாலாட்டும் 
இலைகளின் அசைவுகள்
விழித்திடும்  பறவைகள் 
விம்மிடும் ஓசையின் 
வியக்கவைக்கும் சங்கீத மழை
வேதனை மறந்து 
பனித்துளிதொட்டு 
பக்குவமாய் பறந்துவரும்
தெவிட்டாத தென்றலின் இனிமை
இருளை விளக்கி 
ஒளிக் கற்றையாய் வெளிவரும் 
சூரியன் 
அத்தனையும் இனிமைதான் 
சூரியன் சுட்டேரிக்கும்வரை
                                                                                                     ....ஆண்டியப்பன்.......

திங்கள், 2 பிப்ரவரி, 2015

                                         சுதந்திரம்

                                    Image result for NEW PHOTOS

தந்தை  இழந்து
தாயை  இழந்து 
தமயன் பைத்தியமாய்
துன்பங்கள் சூழ்ந்தாலும்
சுதந்திரம்  என் உரிமை என்றார்
வ.உ.சி.
உன்னஉணவில்லை
உடுத்தஉடையில்லை
பட்டினி மாறவில்லை
பாட்டெழுத மறக்கவில்லை
சுதந்திரம் என் உரிமை என்றார்
பாரதி
மீசை துடிக்க
நரம்புகள் புடைக்க
அன்னியர் ஆட்சியகற்ற
பாஞ்சாலபடை தன்னை
பாய்ந்து நடத்தினார்
கட்டப்பொம்முதுரை
உறங்க வீடின்றி
உன்ன உணவின்றி
மானமிழந்து
கற்பிழந்து
கயவனின் கைகளில்
கட்டிக்கிடந்த
பாரத தேவியை
பக்குவமாய் பெற்ற சுதந்திரம்
இன்று
66 ஆறாம் குடியரசுதினம்
கோலாகல கொண்டாட்டமாய்
இன்று  மட்டும்
நினைக்கும்
ஏழ்மைநினைவுகளுடன்
                                                                                                                                                                                    .....ஆண்டியப்பன்....