புதன், 20 மே, 2015

                                    காதல்

                                                 
 என் தெருவை மறந்து 
உன் தெருவில் நடக்கிறேன் 
என் வீட்டை மறந்து 
உன் வீட்டைப் பார்க்கிறேன்
என் குரலை மறந்து 
உன் குரலில் பேசுகிறேன் 
என் சிரிப்பை  மறந்து 
உன் சிரிப்பிற்காக ஏங்குகிறேன் 
உன்னைத் தொடும் தென்றலைப் பார்க்க 
எனக்கு கோபம் வருகிறது 
நீ வெறுங்காலில்  நாடக்க
 என் நெஞ்சம் வகவலிக்கிறது 
என் கண்கள் 
தூக்கம்  மறுக்கிறது 
என் மனதில் 
ஏக்கம் பிறக்கிறது 
ஒரு நொடியில் கண்ணில்நுழைந்து   
யுகமாய் வாழும் 
என் இதயத்தில்        
உலகமே மகிழ்வாய் தெரிகிறது 
என்னவளே !
உன்னைப் பார்த்ததுமுதல்
                                                                                                                                                      ......ஆண்டியப்பன் ..... 

திங்கள், 18 மே, 2015

                               காதலித்துப்பார்

                                         Image result for happy face photos
மலரைக் காதலித்துப்பார்
நல்ல வாசனை கிடைக்கும் 
மரத்தைக் காதலித்துப்பார்
நல்ல  காற்று  கிடைக்கும் 
பூமியை காதலித்துப்பார்
பசுமை செழித்தோங்கும் 
காதலியை காதலித்துப்பார் 
மனசு மலரும் 
மனைவியைக்  காதலித்துப்பார் 
வாழ்க்கை  சிறக்கும் 
 குழந்தைகளை காதலித்துப்பார் 
குடும்பம்  மகிழும்  
நாட்டைக் காதலித்துப்பார்
அனைத்து உயிர்களும்  சிரிக்கும்
                                                                                                                                ........ஆண்டியப்பன்.........

திங்கள், 11 மே, 2015

                               தமிழ்ப்பெண்

                                        Image result for tamil pengal photos
குங்குமப்போட்டோ
குலைந்துபோனது
ஸ்டிக்கர் பொட்டோ
அரசாலுது
பாவாடை சட்டை 
பறந்து போனது 
மிடியும் சுடிதார்
பழக்கமானது
எங்கள் தமிழ்ப்பெண் அழகெல்லாம்
இறந்து காலம் 
ஏலேட்டானது
வெட்கம்  நாணம் 
அச்சம் மடமும் 
வெம்பிப்போகும்  காலமானது
வீரம் வேட்கை 
விவேகமெல்லாம்
வேறுவழியாய் 
எங்கோ போகுது 
தமிழகப்பெண்ணின்  
பெயரை மட்டும்
தழைத்துநிற்கும் தனிமரமாய்!
                                                                                                                                                        ......ஆண்டியப்பன்.......  

சனி, 9 மே, 2015

                                           பேனா!

                                        Image result for NATIONAL PHOTOS
ஓ!நெற்கதிர்களே!
உங்கள்  தலைகுனிவு
எங்கள் பசியைப் போக்கும் அமுதமாகிறது!
ஓ! மரங்களே!
கனிந்து குனிவதால் 
உயிகளின் சுவைமிகு  உணவாகிறது!
ஓ!கருமேகங்ககே!
நீங்கள் குனிவதால் 
எங்கும் பசுமை சிரிக்கிறது !
ஓ!தென்றலே !
நீ  குனியும் போது
உயிர்களின் சுவாசமாகிறாய்!
ஓ!சூரியனே !
நீ தலை குனியும் போதுதான்
பூமியே துயில்லேளுகிறது !
ஓ!எழுத்தாளர்களே!
உங்கள் பேனா  குனியும் 
ஒவ்வொரு முறையும் 
நம்  பாரதம் செழிப்பதற்காக இருக்கட்டும் !
                                                                                                                                                                                              .......ஆண்டியப்பன் ......

திங்கள், 4 மே, 2015

                                       வெண்சுருட்டு

                                   Image result for smoking style photos
நீங்கள்  கெடுவதுடன் 
வாரிசும்  கெடும் கொடியவிஷம்
கேடுகளை ஒழிக்க 
ஆங்காங்கே விளம்பரங்கள்  
தீமையை ஒழிக்க 
குறும்படங்கள் 
கெட்டதை  ஒழிக்க 
தேசம் செலவு செய்யும் 
பல்லாயிரம் கோடிகள் 
தினம் தினம் பார்த்தாலும்
திருந்துவது என்னவோ!
கானல் நீராய்
பத்து விரலில் பாங்காய் உழைத்து 
இரண்டு விரலாய் எரித்துக்கெடுக்கும்
அன்பு உள்ளங்களே 
கெட்டதை  விடுத்து 
நல்லதை எடுங்கள் 
புதிதாய் மலரட்டும் வாழ்க்கை
                                                                                                                                                                            ........ஆண்டியப்பன்...........

ஞாயிறு, 3 மே, 2015


                                    உழைப்பாளிகள்

                                                Image result for worker photo

குளிரில்  தழுவி 
வெப்பத்தில்  நனைந்து 
இதமாய்  முடியும்  தென்றலே !
பூபாலத்தில்  தொடங்கி 
யுத்தம்  முடித்து 
மறைந்து விழிக்கும் சூரியனே 
கூடுவிட்டு பறந்து சென்று 
கூட்டாக சோறும் உண்டு 
மயக்கும் மாலை 
மகிழ்வாய்  வீடுவரும்  பறவைகளே!
உங்களுக்குள் ஏற்ற  இரக்கமில்லை 
அத்தனையும் சமமாகும்.  
ஆனால் 
நேரம் பிரித்தளித்து 
ஓய்வு புறந்தள்ளி 
உழைப்பைக் கொடுத்த  மனிதனுக்கு 
பதவிவாரியாய்  பரிசளிப்பு 
உயர்ந்தோன் தாழ்ந்தோன்னென 
உழைப்பைக் கொடுக்கும் உழைப்பாளிக்கு
ஒதுக்கப்பர்டது  100%
30%சதம் மட்டுமே 
பெற்றது போதும் புறந்தள்ள  தயாரில்லை 
எங்கள் குழந்தையும் சிரகடிக்கவேண்டும் 
நாங்கள் உழைப்பாளிகள். 
                                                                                                     ........ஆண்டியப்பன் ........