புதன், 21 அக்டோபர், 2015

                                             கவிதை



                           
                    
                                            

     




      

 Image result for 10 most beautiful places in the world national geographicஎழுதி வச்ச காகிதமும் 
ஒரு நாளில் கிழியலாம் !
ஏங்கி நிற்கும்  கண்கள் கூட 
 இமைக்காமல்  இருக்கலாம் !
தூக்கம்  வந்து  ஏக்கம் வந்து 
கண்கள் மூடித் தூங்கலாம் !

ஏடெழுதும்  பேனாவும் 
எழுதாமல்  நிற்கலாம் !
எங்கமனம் ஒருநாளில் 
எப்படியோ மாறலாம்!
எத்திசையும்  மக்கள்  குளம் 
ஒருநாளில்  அழியலாம்!

படைக்கும் தெய்வம் திருமால்கூட 
தன்தொழிலை  மறக்கலாம் !
காக்கும் தெய்வம் பெருமாளிங்கே 
காக்காமல் இருக்கலாம் !
மூத்த தெய்வம்  சிவனே இங்கு 
தன்தொழிலை  வெறுக்கலாம்!

பேனாவில் மையும் கூட 
பேசாமல் நிற்கலாம் !
விலையில்லா  பொருள்கள் கூட 
விலையாகிப் போகலாம் !
பிறந்துவிட்ட  உயிர்கள் கூட 
ஒருநாளில்  இறக்கலாம் !

பங்காளி உறவு கூட 
பத்து நாளில் பிரியலாம் !
அண்ணன் தம்பி பாசம்கூட 
அடியோடு  அழியலாம் !
அப்பாவும் அம்மாவும் 
அன்பு பாசம் குறையலாம் !

காலங்கள்  மாறிப்போகும் 
கற்பனைகள் சிதைந்துபோகும் !
கண்ணுக்குள் ஓவியமோ 
கடுகாகி கரைந்து போகும் !
நான்படைக்கும் கவிதைகளோ 
இறப்பில்லா  காவியமாகும் !
                                                                                                                                                                 ......ஆண்டியப்பன் ......