திங்கள், 5 ஜனவரி, 2015

                                    இளைஞர்கள்

                        

 ஆலமரத்தையும் ஆட்டிப்பார்க்கும் தென்றல்
பெரியமரத்தில் பழுத்துத் தொங்கும் சிறு பழங்கள்
சிரிய கோடியில்  காய்த்துக்கிடக்கும் பெரிய காய்கள் 
நீரோடை வழிகள்  அடைத்துக்கிடந்தாலும்
வேரோடை இன்றி வழிந்தோடும் மழைத்துளிகள்
வானோடு முட்டும் மலைமுகடாகிலும்
ஒளியோடை தடுக்கா ஓடி விளையாடும்  சூரியஒளிகள்
சுட்டெரித்தாலும்  சோர்ந்துபோகா பசுந்தளிர்கள்
பசுவுக்கு போக்குக்காட்டும்  சிறுகன்றுகள்
சேட்டைகள் செய்யும் சிரியவரென்று 
ஏழனப்பேச்சிங்கே வேண்டாம்  
நாங்களும்  நாட்டிற்காக நலம்  செய்வோம் 
தந்தையைக் காக்கும் தமயனாய்
தாயைக் கொஞ்சும் குழந்தையாய்
இருட்டை விரட்டும் சிறுவிளக்காய் 
எங்களாலும் முடியும் 
நாங்களும் சாதிப்போம் என்றும் இளைஞர்களாய்
                                                                                                                                                                                                           ......ஆண்டியப்பன்......
[உங்கள் மனதில் தோன்றம் கருத்தை பதிவுசெய்யுங்கள் ]