புதன், 21 மே, 2014

                                     கொண்டாட்டம்   

பூந் தோட்டத்தில்
நின்று பார்
நினைவெள்ளம்  வாசம் வீசும்
பசுங் கூட்டத்தை
உற்றுப்பார்
கன்றுகளின் மகிழ்ச்சி தெரியும்
சிறு விதையை
உற்றுப்பார்
பெரிய மரத்தின் வேர்கள் தெரியும்
தாய் தந்தையறை
உற்றுப்பார்
அவர்களின் தியாகம் தெரியும்
 தாய் தந்தையரின்
மடியில் படுத்துப்பார்
மகிழ்ச்சியின் மான்பு புரியும்
திந்தமிழை
தின்றுப்பார்
செந்தமிழும் தேனாய் இனிக்கும்

                                                                            ...ஆண்டியப்பன்


கருத்துகள் இல்லை: