புதன், 20 மே, 2015

                                    காதல்

                                                 
 என் தெருவை மறந்து 
உன் தெருவில் நடக்கிறேன் 
என் வீட்டை மறந்து 
உன் வீட்டைப் பார்க்கிறேன்
என் குரலை மறந்து 
உன் குரலில் பேசுகிறேன் 
என் சிரிப்பை  மறந்து 
உன் சிரிப்பிற்காக ஏங்குகிறேன் 
உன்னைத் தொடும் தென்றலைப் பார்க்க 
எனக்கு கோபம் வருகிறது 
நீ வெறுங்காலில்  நாடக்க
 என் நெஞ்சம் வகவலிக்கிறது 
என் கண்கள் 
தூக்கம்  மறுக்கிறது 
என் மனதில் 
ஏக்கம் பிறக்கிறது 
ஒரு நொடியில் கண்ணில்நுழைந்து   
யுகமாய் வாழும் 
என் இதயத்தில்        
உலகமே மகிழ்வாய் தெரிகிறது 
என்னவளே !
உன்னைப் பார்த்ததுமுதல்
                                                                                                                                                      ......ஆண்டியப்பன் .....