செவ்வாய், 9 செப்டம்பர், 2014

                                              விவசாயி

                                         Red-eyed Tree Frog (Agalychnis callidryas), northern Costa Rica 

மேகத்தை  வரவாக்கி 

மழைத்துளியை நீராக்கி 

நிலத்திலே நீர்பாய்ச்சி

 ஏரோட்டி செராக்கி

சேற்றிலே விதைதூவி 

குழந்தையை பாதுகாக்கும் 

தாயாய் 

பயிரை பார்த்து வளர்த்து

அறுவடையில் 

சேர்த்து வைத்த 

நெர்பொதியை 

அடிமாட்டு விலைபேசி 

விற்று வந்த ஏழைக்கு 

அரசு கொடுத்தது 

கிலோ  இரண்டுரூபாய் அரிசி 

அவசர கழிவறைக்கு 

 அவசரமாய் தான்செல்ல 

கழிவறை  காவலரின் 

கதவருகே 

உண்ண  இரண்டுரூபாய் 

கழிக்க ஐந்துரூபாய் 

ஏழை என்றும் ஏழையாய் 

                                                                                                                                .....ஆண்டியப்பன் .........

http://andiappanka.blogspot.in/

1 கருத்து:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

உண்ண இரண்டு
கழிக்க ஐந்து
இன்றைய வாழ்வியல் யதார்த்தம்
தங்களின் வரிகளில்
முதல் முறையாய் தங்களின் தளத்திற்கு வந்தேன்
இனி தொடர்வேன் நண்பரே