ஆசிரியன்
தட்டி தட்டி
அணிகலன் செய்யும்
சிறந்த
பொற்கொல்லனாக்குபவன்
அடித்து உடைத்து
சிலை வடிக்கும்
சிர்பியாக்குபவன்
நாட்டில் பலரை
நாயகனாக்க
நாளும் பாடுபடுபவன்
அறியாமை போக்கி
அறிவை புகட்டி
அமைதியாய்
இருப்பவன்
தென்றலாய் தவழ்தாலும்
புயலாய் அடித்தாலும்
பூகம்பமாய் வெடித்தாலும்
பொறுமை இலக்காதவன்
காந்திய வழியில்
கர்மமே கண்ணாய்
தடைகளைத்தாண்டி
நாட்டின் உயர்வே
நலனென எண்ணி
நாளும் உழைத்து
நாளைய இந்தியாவை
இன்றே செதுக்கும்
உண்மைச்சிற்பி
ஆசிரியன்
(ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் ) .....ஆண்டியப்பன் ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக