வெள்ளி, 5 செப்டம்பர், 2014

                                            ஆசிரியன்

                                                 

                       தட்டி தட்டி 

                      அணிகலன் செய்யும் 

                       சிறந்த

                        பொற்கொல்லனாக்குபவன் 

          அடித்து உடைத்து 

          சிலை வடிக்கும் 

          சிர்பியாக்குபவன்  

          நாட்டில் பலரை 

          நாயகனாக்க 

          நாளும் பாடுபடுபவன் 

          அறியாமை போக்கி

          அறிவை புகட்டி 

          அமைதியாய் 

          இருப்பவன் 

          தென்றலாய் தவழ்தாலும் 

          புயலாய் அடித்தாலும் 

          பூகம்பமாய் வெடித்தாலும் 

          பொறுமை இலக்காதவன் 

          காந்திய வழியில் 

          கர்மமே கண்ணாய் 

          தடைகளைத்தாண்டி 

          நாட்டின் உயர்வே 

          நலனென எண்ணி 

          நாளும் உழைத்து 

          நாளைய இந்தியாவை 

          இன்றே செதுக்கும் 

          உண்மைச்சிற்பி 

          ஆசிரியன் 

            (ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் )                .....ஆண்டியப்பன் .... 

 

கருத்துகள் இல்லை: