புதன், 4 பிப்ரவரி, 2015

                             சூரியன் சுட்டெரிக்கும் 

 பசுமை படர்ந்து 
 பக்குவமாய் பல்லிளிக்கும் 
பசும்புற்கள்
புல்லின்  நுனியில் 
கொண்டையிட்டுஅமர்ந்திருக்கும் 
பனித்துளிகள் 
இன்ப சுகத்தை 
இனிதே  தாலாட்டும் 
இலைகளின் அசைவுகள்
விழித்திடும்  பறவைகள் 
விம்மிடும் ஓசையின் 
வியக்கவைக்கும் சங்கீத மழை
வேதனை மறந்து 
பனித்துளிதொட்டு 
பக்குவமாய் பறந்துவரும்
தெவிட்டாத தென்றலின் இனிமை
இருளை விளக்கி 
ஒளிக் கற்றையாய் வெளிவரும் 
சூரியன் 
அத்தனையும் இனிமைதான் 
சூரியன் சுட்டேரிக்கும்வரை
                                                                                                     ....ஆண்டியப்பன்.......

கருத்துகள் இல்லை: