திங்கள், 3 நவம்பர், 2014

                                      நியூட்டன் விதி


                              

என்முகம் பார்க்க
கண்ணாடி முன்னால் 
நான் நின்றாலும்
உன்முகம் தானே தெரிகிறது
உன்முகம் கானா
இடைவெளி நேரம்
பனிக்கூழ்கூட சுடுகிறது
என்மனம் ஏனோ
உன் நிழல்கூட
ஒட்டி ஒழிந்து கொள்கிறது
உன்முகம் பார்க்க
என் மனம் ஏனோ
ஊமை மொழியில் சிரிக்கிறது
என் விழி உன்முகம்
பதித்திடும் நேரம் 
என்மனம் பரவசமாகிறது
இருவரும் நோக்கும்
இனிமையின் நேரம்
நியூட்டனின்  விதியே நிகழ்கிறது
                                                                                                          ....ஆண்டியப்பன்....

1 கருத்து:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை

word verificationஐ நீக்கிவிடலாமே நண்பரே