நியூட்டன் விதி
என்முகம் பார்க்க
கண்ணாடி முன்னால்
நான் நின்றாலும்
உன்முகம் தானே தெரிகிறது
உன்முகம் கானா
இடைவெளி நேரம்
பனிக்கூழ்கூட சுடுகிறது
என்மனம் ஏனோ
உன் நிழல்கூட
ஒட்டி ஒழிந்து கொள்கிறது
உன்முகம் பார்க்க
என் மனம் ஏனோ
ஊமை மொழியில் சிரிக்கிறது
என் விழி உன்முகம்
பதித்திடும் நேரம்
என்மனம் பரவசமாகிறது
இருவரும் நோக்கும்
இனிமையின் நேரம்
நியூட்டனின் விதியே நிகழ்கிறது
....ஆண்டியப்பன்....
1 கருத்து:
அருமை
word verificationஐ நீக்கிவிடலாமே நண்பரே
கருத்துரையிடுக