வெள்ளி, 24 மார்ச், 2017


மலர்களின் மகரந்தத்தை எடுக்கும் 
வளைக்கரம் சுமப்பதும் 
ஒரு சுகமே !
பூக்களே!
 நாங்களும் வீழ்வோம் 
என்பதை அறிந்தும் 
காய்களை உற்பத்தி செய்வதும் 
ஒரு சுகமே !
காய்களும் ஒருநாள் முதிர்வோம் 
என்பதை அறிந்து 
காய்களும்  கனிவது 
ஒரு சுகமே!
கனியும் ஒருநாள் விதையாவோம் 
என்பதை அறிந்தும் 
பூமியில் விழுந்து முளைப்பதும் 
ஒரு சுகமே !
அக்கா, தங்கை, அண்ணன் ,தம்பி 
கூட்டுக்குடும்பத்தின் 
இன்பதுன்பத்தின் எல்லா நிலையிலும் 
இன்பத்தை மட்டும் சுமப்பதும் 
ஒரு சுகமே !

1 கருத்து:

jeevanantham சொன்னது…

நல்ல வரிகள் மாமா!