ஞாயிறு, 1 டிசம்பர், 2013

உற்றுப்பார் உண்மை தெரியும்



கால்கள் இல்லை என்று
கவலை கொள்ளாதே.

கண்களும் இல்லாமல் வாழ்கிறார்கள்.

நடந்துபார்
வழுக்கள் நிலமும் வழிவிடும்

தட்டிப்பார்
கதவுகள் திறக்கும்.

கேட்டுப்பார்
கேட்டது கிடைக்கும்.

விழித்துப்பார்
இந்த உலகம் தெரியும்.

உற்றுப் பார் உண்மை தெரியும்

மனிதனே
உழைத்துப் பார்
வெற்றியின் ரகசியம் தெரியும்

ஆண்டியப்பன். க

கருத்துகள் இல்லை: