காற்றே! காற்றே!
காற்றே காற்றே கண்ணுக்குள்ளே
               ஒழிந்தே  இருப்பாயா?
காற்றே நீயும்  நெஞ்சப் பையில் 
                குடிகொண்டிருப்பாயா?
காற்றே  நீயும் மெய் தொட்டு பயில
                என்னுடன்  வருவாயா?
காற்றே  நீயும் தலைவியின்  உடம்பை
                 தொட்டுப்பார்த்தாயா?
நீ பஞ்ச பூதத்தை  அவளில் கண்டு 
                  புயலாய் ஆனாயா?
நீ சுழன்று வீசும் சுறாவளியாய் 
                  சுற்றித்திரிந்தாயா?
என்னவள் சிரிப்பை கண்டதும்  நீயும் 
                  தென்றல்லானாயா?  
நீ  மலரில்  விழுந்து  மனதில் எழுந்து 
                  கவிதையானாயா?
           நீ  கவிதையானையா?
                                                                                                      ......க.ஆண்டியப்பன் .......
 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக